Saturday, 27 July 2019

பிறந்தேன் - எழுந்தேன் !

நீ 
ஆண் - பெண் என
பிரிந்திருப்பது ஏன் உயிரே !
உன்னிடம் விடை கிடைக்கும் 
இடங்கண்டு சொல்வாயோ?

எனக்கும், 
பிறக்கும் ஆசை கொடுத்திருப்பாய்.
பரம் சென்ற 
அரு ஒன்றை பிரியச்செய்திருப்பாய்.

நான் பிறக்க - வரங்கேட்டு 
எத்தனை தவம் பூண்டேனோ ?
முதுமை எல்லை மீறி 
முகம் சுழிக்கும் என்னை 
எடுக்க உண்மையில் 
எத்தனை சிவம் ஆனேனோ ?

எதுவும் புரியா பிரம்மை 
புரிந்துகொள் என்கிறது.

பிறந்தேன் - எழுந்தேன்.

எளிதில் தொடும் உடல் 
எளிதில் தொழும் உள்ளம் 
எதற்கோ பிறந்தேன் நான் !
உன்னிடம் கேட்க முன்வந்து 
நீயே கேள்வியானதுதான் விடையோ
உயிரே? 

No comments:

Post a Comment