Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Thursday, 30 January 2020

சிறுச்சிட்டோ!

உணர்வுகள்,
எந்த ஒரு அசைவின் எதிரொலி!
நீ சொல்லும் என் உலகம்
இந்த நொடியின் அந்த உலகம்
மாறும் உணர்வுகளால்.

அவ்வண்ணம்
சிறுக சிறுக சேகரித்தேன்
இப்பூமியில் பிறந்தமுதல்!

நினைவுகள் தோன்றின!

நினைவுகளை
உணர்வில் நிறுத்தி வைத்தேன்.
நிஜங்களில்
உணர்வுகளின் நிரல்கள் கண்டேன்,
நிழலுக்கும் உணர்வுள்ளதோ
எனும் எல்லைவரை நின்றேன்.

சேர்ந்த உணர்வுகள் சீர் செய்து
பண்புகள் பற்றிக்கொள்ள
பறந்தேன்!

புது புது உணர்வுகள் உருவாக்கினேன்.
புனரலனின் தனிமைக்கும்
புதிர் கொடுத்தேன்
பூரிப்படைந்தேன்!


கூடாத குகையினில்
கூடெழுப்பி சிக்கிக்கொண்டேன்.
சிறைசென்றேன்.
அனுபவத்தின் சிறுப்பொறியில்
மீண்டும் சிறகடித்தேன்!

தீராத ஏக்கத்தில் விடைப்பெற்றேன்
எண்ணங்களின் மாறாத மாற்றத்தில்
மாட்டிக்கொண்டிருந்தேன்.

என் முன்ஜென்மத்தில்!

Wednesday, 22 January 2020

காற்றின் குரல்!

கிளை அசைவோ!
இலை உரசலோ!
சிறகடிக்கும் காகிதமோ!
எதில் கண்டேன்?

நிலா தெரியாத இவ்விரவில்
நீயும் நானும்தான்.

மதிகெட்டாத மர்மம் நீ!
மௌனமா என்னுள்?

உரிமையில்லா வளம் நீ!
எதற்கும், எவருக்கும்.

தொடர்ந்தேன்!
உனைவிட பிரிவேன் இவ்வுலகை

மென்மையாக
எனைத்தழுவவேண்டி - உன் வேகம்
பொறுமை இழக்க கேட்டேன்
அக்குரலை!

Wednesday, 16 October 2019

சிவமாக நாம்!

தனித்து காட்டும் போதை
தவிப்பை தருமோ 
கலைந்து போகும் எண்ணம் 
அதுமட்டும் 
கண்ணோடு கலப்பதேன்?
புன்னகைத்துக்கொள்! 
இதுவரை நீ 
கேட்ட கேள்விகள் 
ஓராயிரம் எட்டிவிட்டது.

நலமே தரும் சிவம் 
நட்புறவை தேடு!

Tuesday, 15 October 2019

என்றும்!

நினைவுகள்
சேகரிப்பதில் 
உணர்வுகள் - தன் 
கொள்கையைத்தான் 
முன்னிறுத்தி வைக்கும்! 

நினைவுகளை 
சேகரிப்பதில் - நாம் 
உணர்வுகளைத்தான் 
முன்னிறுத்தி வைப்போம்!

என்றும்.

Tuesday, 13 August 2019

ஒரு முட்டாளின் முகம் !

எவ்வளவுக்கூர்மை என்னறிவு!

என்க,
பார்க்க முடிகிறது
ஒரு முட்டாளின்
முழுமையான முகத்தை.

அறியாமை அசைந்தாலும்
அந்த மௌன முகத்தில்
சலனம் சற்றும் இல்லை - நிறுத்திப்பார்க்க
வேண்டும் நமக்கு நிதானம்!

ஒரு கலியுக நாகரீகவாதி
நிர்வாண நாகரிகத்தை
கண்முன்னே காணும் சூழலது!

புதிய அம்முகம்
புன்னகைக்க திடுக்கிட்டேன்,
அடுத்த துளி அறிவை
நான் காலத்தோடு கடக்கும்போது.


Saturday, 27 July 2019

பிறந்தேன் - எழுந்தேன் !

நீ 
ஆண் - பெண் என
பிரிந்திருப்பது ஏன் உயிரே !
உன்னிடம் விடை கிடைக்கும் 
இடங்கண்டு சொல்வாயோ?

எனக்கும், 
பிறக்கும் ஆசை கொடுத்திருப்பாய்.
பரம் சென்ற 
அரு ஒன்றை பிரியச்செய்திருப்பாய்.

நான் பிறக்க - வரங்கேட்டு 
எத்தனை தவம் பூண்டேனோ ?
முதுமை எல்லை மீறி 
முகம் சுழிக்கும் என்னை 
எடுக்க உண்மையில் 
எத்தனை சிவம் ஆனேனோ ?

எதுவும் புரியா பிரம்மை 
புரிந்துகொள் என்கிறது.

பிறந்தேன் - எழுந்தேன்.

எளிதில் தொடும் உடல் 
எளிதில் தொழும் உள்ளம் 
எதற்கோ பிறந்தேன் நான் !
உன்னிடம் கேட்க முன்வந்து 
நீயே கேள்வியானதுதான் விடையோ
உயிரே? 

Thursday, 27 June 2019

ஒரு கதைக்களம் !


ஒரு கதைக்களம்
மலைச்சாரலே சூழல்,
குன்றுகள் நிறைந்த
கூடுகள் - அதில் 
துளி துளியாக சேர்ந்தது
எண்ணங்கள் !

கரடு முரடென பாதை உருவாக்கி
நீர்பாய்ச்சி,
மிருகம் என்று விமர்சிக்கும் உயிர்க்கும்
தாகம் தீர்த்து,
உருண்டு விழுகிறது
வெளிப்படுகிறது.
நீ கண்டு மகிழும்
நீர்வீழ்ச்சியாக !

#என்எண்ணங்கள்

Saturday, 9 February 2019

ஏமாற்றமல்ல !

அடுத்த நொடியை
பிடிக்க தொடுத்த
ஓர் கற்பனையின் இழப்பு,
யாரோ
கொடுத்த நினைவை
உயிருக்குள் வலியோடு
படித்த காலம்.

இவ்விரண்டும்
என் வாழ்வின் மாற்றமே !

ஏமாற்றமல்ல !

Sunday, 11 November 2018

உணர்வுச்சிலை !

உந்த தகுதியிருந்தும்
ஊரும் காலத்தில்
உலா வர நினைத்தது தானோ
என்னை
காலம் மாறுமென்று
எண்ண வைத்தது.

வாழ் இனிய கனியே
உன்னை
காண காய்ந்திருந்தேன்
நான்
வெயில்பட்ட உடல்
நிழல்பட்டுத்திரும்ப
உணர்ந்தேன் !

உணர்ந்தேன்
உந்த தகுதியிருந்தும் !

Sunday, 23 September 2018

அழகானவள் !

தோகையில்
வடிக்கலாம் அவள் வடிவை
தோழியவள்
தோற்கிறாள் என் காதலில் ! 

Thursday, 20 September 2018

உயிர்

இவ்வுலகில்,
மறக்க வேண்டியது உயிர்மட்டும்தான் !
பாதுகாக்க வேண்டியதும் உயிர்மட்டும்தான் !
கண்டறிவோம் ஒரு வழியை
ஆன்மிகம் இல்லாத
ஒரு வழியை !

வெளிவரும் வார்த்தைகள்
உயிர் இனத்துக்கான
வார்த்தையாய் வளம் வரட்டும்.
ரீங்காரம் பாடும் கொசு - அதுவும்
மனிதன் விரல் தொட்டு விளையாடட்டும்.
இவை இயல்பாக நிகழட்டும்.

இயற்கை !
நல்வினை தீவினை அறியாதது,
எடுப்பதை கொடுக்கும்
நீ கொடுப்பதையே எடுக்கும்
இறுதியில் !
உன் நிகழ்வு
புவியில் நிகழ்ந்தவையாக இருக்கும்.
பொழுதுகள் போதாது தோழா !
உன் எண்ணத்தை குறிக்க
நீ எண்ணியவை
எழும் வெளிச்சத்தில்
கரையாது காத்துக்கொள்.
புது ஒரு விடியல் தொடங்கும் . . .


எழுதுமோ !

எழுதும் விரல் இடையே
மாட்டிக்கொண்ட கோல்போல்
யார் நினைவில்
மாட்டிக்கொண்டுள்ளேன் நான்
வாழ்வென்ற வாழ்வும் வைத்து ! 

பயம் !

கண்களுக்கு
பயம் பக்கமே !
பார்த்தேன்,
அவை இரக்கத்தின்
வெளிப்பாடோ என்று . .

இரக்கத்தின் வெளிப்பாடே பயம் எனக்கு !

மறைகிறாய் பெண்ணே !

மறக்கப்படுகிறாய் பெண்ணே
கொஞ்சம் கொஞ்சமாய்,

நீ யாரென்று தெரிந்த போதும்
என் மனதில் மறைகிறாய்,
பித்தம் தீர்ந்ததோ
பித்தன் திருந்தினானோ
தெரியவில்லை மின்னலே !
உன் ஓயாது ஒலித்த குரலும்
மௌனமாய் !
மனதிற்குள் என்கிறது இதயம்.
நானும் சாட்சியாயிற்றே
யாரிடமும் இல்லை நீ !

ஏனோ என்னவளே
என்னுள் மட்டும் ஒட்டிக்கொண்டாய்,
உனக்கு மட்டும் நான் எழுத்தாக
இயல்பெனும் இறப்பு இருக்கும்வரை
நாம் இருப்போம்.
நிலா வலம் வரட்டும்,
நீர் அது உன் பாதம் தேடட்டும்,
இவ்வியற்க்கை நம்மை சுகிக்கட்டும்.
இடம்பெயர்ப்போம் நாம்
' நீ இன்றி இல்லா உலகு '
படைப்போம்
எனக்கென மட்டும் ஒரு மழை
பொழிவாயோ !
என் கார் இருள் மேகமே !

புது ஆயிரங்கள் !

மெல்லிய புன்னகை உனக்கு !
யார் என தெரியாதபோதும்
புன்னகையும் - காகித பூவோ எனக்கு ?

எங்கிருந்து எழுந்தாய்
எங்கே அமர துடிக்கிறாய் ?
அழகான அலைகள் !
அவை புதிரோ
புலம்பலோ
நிற்கும் இடம் தென்படவில்லையோ
நிறுத்திப்பார் !
தனிமையில் கேட்கும் கேள்விகள்
உரையாடுவது யாரோடு ?

குழம்பும் ஆன்மாவே !
உனக்காகவேனும்
ஒரு வரி வடிக்க நினைக்கிறேன்.
சிரிப்பொலியின் அர்த்தம்
சிலரை மட்டும் நினைவூட்டுவது ஏன் ?

ஊர்ந்த உன் நினைவுகளில்
கூர்ந்த உன் பார்வைகள்
உலகம் மறந்து உன்னுள்ளே உருண்டு
உணர்ந்தது உன் தத்துவங்களால் !

புணர்ந்தது புது ஆயிரங்கள்.

Friday, 31 August 2018

தமிழ் !


ஒப்பிடவில்லை
ஒப்பில்லா மொழியை !

இறைப்பொருள்
அதன் உணர்வு.

அதிகமே !
என் மொழியின் விளக்கம்.

ஒலி உரு-ஆன உயிர்க்கு
உடல் விழி ஓதும் பிராத்தனை,
உளியால் உருவான கவிதை !


திருத்தும்
திருந்தும்
துதி தினந்தோறும் பிறக்காதோ !
இறவாத்தமிழ் - எனும்
இயல்பு ஒன்று
இந்த நொடியே தொடராதோ !

Saturday, 11 August 2018

உவமை !

முதல் வார்த்தையே
பித்தன் என்றால்
பிழையாகுமோ ?
பின்வரும் அர்த்தம்
பிரியாது என்றால்
புரிந்துகொள்.

பிதற்றுவது பித்தனல்ல !

பிஞ்சும்,
புரியும்,
புத்தி உருவாக்கியது
உடையவன்தான்.

உன்னுள் இருக்கும்
உள்ளம் தெரிவதைவிட,
உன் உவமையதைக்காட்டு !

உன்னோடு
என்னவனும் (எழுத்து அவன்)
வாழ்வான் !

Saturday, 14 April 2018

ஒரு நாள் !

ஓர் மரத்தடியில்
மௌனமாய் !
இயற்கையின் குரல்
கேட்கும் அளவிற்க்கு
அமர்ந்திருக்கிறேன் !

தன்னிலை !
என்ன என்பதை
சொல்ல தெரியாதபோதும்,
சொல்ல தோணுகிறது.
நான் !
எங்கோ ஓடி
ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறேன்.
 
எல்லாம் மறந்து போக
இன்பம் கிடையாதே
என்னுல் !
எழுதும் விதியும்
எழுத்து பிழையில்தான்.

Thursday, 12 April 2018

உன்புலம் !

தெரியாதவை,
என்னை திணறவைப்பவை !

தெரியாததில்,
நாளை என்கிறேன் !

தெரிந்தவையே,
நான் என்கிறேன் !

ஆச்சர்யம் - தெரியாமல் பார்ப்பதில்தானே !

தோன்றும் எண்ணங்களே
எங்கிருந்து தோன்றுகின்றீர் ?
உன்புலம் தெரியாமல் தேடுகிறேன் !
உண்மையில் உன்னுள் ஓடுகிறேன் !

தெரிந்தவையே !
உனக்கொன்று சொல்கிறேன்
தெரியாதவை !
என்னை தெளிவுப்படுத்தும் .

Wednesday, 11 April 2018

நாளும்

ஒரு
தோல்வியைக்கண்டு
திரும்பும் கனவு
கதையாக வேண்டும்
உடன்
தோழமைக்கொண்டு
துணையாக வந்தால்
தொலைத்திட வேண்டும்

நான் எனும் நல்லொழுக்கத்தை !

- நாளும் தொலைப்போம்
ஒரு
நல்லொழுக்கத்தை !