Wednesday, 22 January 2020

காற்றின் குரல்!

கிளை அசைவோ!
இலை உரசலோ!
சிறகடிக்கும் காகிதமோ!
எதில் கண்டேன்?

நிலா தெரியாத இவ்விரவில்
நீயும் நானும்தான்.

மதிகெட்டாத மர்மம் நீ!
மௌனமா என்னுள்?

உரிமையில்லா வளம் நீ!
எதற்கும், எவருக்கும்.

தொடர்ந்தேன்!
உனைவிட பிரிவேன் இவ்வுலகை

மென்மையாக
எனைத்தழுவவேண்டி - உன் வேகம்
பொறுமை இழக்க கேட்டேன்
அக்குரலை!

No comments:

Post a Comment