Saturday, 14 April 2018

ஒரு நாள் !

ஓர் மரத்தடியில்
மௌனமாய் !
இயற்கையின் குரல்
கேட்கும் அளவிற்க்கு
அமர்ந்திருக்கிறேன் !

தன்னிலை !
என்ன என்பதை
சொல்ல தெரியாதபோதும்,
சொல்ல தோணுகிறது.
நான் !
எங்கோ ஓடி
ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறேன்.
 
எல்லாம் மறந்து போக
இன்பம் கிடையாதே
என்னுல் !
எழுதும் விதியும்
எழுத்து பிழையில்தான்.

Thursday, 12 April 2018

உன்புலம் !

தெரியாதவை,
என்னை திணறவைப்பவை !

தெரியாததில்,
நாளை என்கிறேன் !

தெரிந்தவையே,
நான் என்கிறேன் !

ஆச்சர்யம் - தெரியாமல் பார்ப்பதில்தானே !

தோன்றும் எண்ணங்களே
எங்கிருந்து தோன்றுகின்றீர் ?
உன்புலம் தெரியாமல் தேடுகிறேன் !
உண்மையில் உன்னுள் ஓடுகிறேன் !

தெரிந்தவையே !
உனக்கொன்று சொல்கிறேன்
தெரியாதவை !
என்னை தெளிவுப்படுத்தும் .

Wednesday, 11 April 2018

நாளும்

ஒரு
தோல்வியைக்கண்டு
திரும்பும் கனவு
கதையாக வேண்டும்
உடன்
தோழமைக்கொண்டு
துணையாக வந்தால்
தொலைத்திட வேண்டும்

நான் எனும் நல்லொழுக்கத்தை !

- நாளும் தொலைப்போம்
ஒரு
நல்லொழுக்கத்தை !

சார்ந்த எண்ணங்கள் !

எண்ணங்கள்,
யோசிப்பது அனைத்துமே எண்ணங்களா ?

இவ்வுலகில் பிறந்தேன்
- இன்று வரை வளர்கிறேன்.

சிலையாய் சிந்தித்தாலும்
சிலை சிந்திக்குமா என்பதில் தோற்கிறேன்.
சரி,
முன்னோடிகள் இருக்கிறார்களா
என் பாதையில் ?
பாதி கடந்தவர்கள் எல்லாம்
பைத்தியம் ஆனார்கள் என எச்சரிக்கை.

ம்,
தாங்கிக்கொண்டேன்
- இன்று வரை வளர்கிறேன்.

உண்மையில் உலகிற்கு புரிகிறதா ?

ஒருவர்
உன் கண்களில் தெரிவதைவிட,
அவர் கண்களுக்கு பின்னால்
ஆயிரம் பார்க்கிறார்கள் என்று.

எனக்கு எதுவும் தெரியவில்லை !

பிறவியிலேயே பார்வை போய்
தனிமை வந்து
மனிதனிடம் மாட்டிக்கொண்ட
நாய்போல்,
நான் ஊமையாக பிறந்துவிட்டேன்.
- என ஊளையிடுகிறேன்

தவிர்க்க முடியாதவைதான்
தகர்க்க முடியாதவை அல்ல !

நம் நினைவு தெரியும் முன்பே
நம்மை நினைவில் கொண்டதல்லவா
இந்த சமூகம் !
சராசரி ஒருவனாக
வளம் வருவேனா
எனக்குள்ளாகவே ஏக்கங்கள்.
நான் என்னை மறந்தாலும்
ஞாபகம்,
சிலரை மட்டும் நினைவூட்டுவது
அன்பில்தான் !

ஒரு கடிதமாய் உருவெடுக்கிறேன் !
சிலருக்கு செய்தி
சிலருக்கு உணர்வாக உலவுகிறேன்.
நீ கரைந்த எண்ணங்களில்
நான்
நானாக வாழ வழிகிடைக்குமா ?

Sunday, 8 April 2018

நீங்காதவையே !

மறக்க முடியாத
நினைவுகள் நீங்காதவையே !
திரும்ப திரும்ப
எடுத்து என்னை காயப்படுத்தாதே,
என்னில் இருக்கும் சிறு
ஆனந்தத்தையும்
நான் இழக்க நேரிடும் .

இறந்த எண்ணங்கள்

தோன்றும் எண்ணங்களோ,
அதன் மறுசொல்லோ,
அல்லது வெளிப்பாடோ
தோற்பது மட்டும்
நானாக இருக்கிறேன் .

ஆயிரம் முறையும் சொல்லிவிட்டேன்

இவை கடந்து போபவையே
கலக்கம் வேண்டாம்
தொடரும் எண்ணங்கள் தோற்பதில்லை
தோண்டும்வரை !
துளை வேண்டாம் உன் வாழ்வில்
துணிவெனும் துகள் போதுமே !

எவரும் கேட்பதாயில்லை

பிளவுபட்ட என் இதயம்
எப்படி சுகிக்குமோ - தெரியவில்லை
என் இறந்த எண்ணங்களை . . . .

தடை

பெரிதாய் ஏதேனும்
தடுப்பதாக தோன்றினால்
அன்னையென்றே பொருள் .
இல்லையென்றால்,
பெரிதில்லையென்பதையுணர் !

என் காலம் !

ஆரம்பமே
ஆடம்பரமானது,
யாவரும்
வெகுதூரமாய் ஓடுவதை காண்கிறேன் .
இயற்க்கை
யார் கண்ணிலும் காணவில்லை,
இயல்பை துரத்தும் நாடகம்
எத்தனை வடிவானவை .
நீயேனும் செவிகொடு இயல்பே
உண்மை மறக்கிறது
உறவுகள் கொண்டாடவில்லை
உனக்கும்
எனக்கும்
உண்டான உறவின்
உரு தெரியவில்லை !

கேள்விகள் ஏனும் கேட்போம் !

இயல்பே !

நீ
எத்தனை அசைவுகளாய் நகர்கிறாய் ?
நான்
ஓர் நாளையே கணக்கிடலாம் !