Sunday, 8 April 2018

என் காலம் !

ஆரம்பமே
ஆடம்பரமானது,
யாவரும்
வெகுதூரமாய் ஓடுவதை காண்கிறேன் .
இயற்க்கை
யார் கண்ணிலும் காணவில்லை,
இயல்பை துரத்தும் நாடகம்
எத்தனை வடிவானவை .
நீயேனும் செவிகொடு இயல்பே
உண்மை மறக்கிறது
உறவுகள் கொண்டாடவில்லை
உனக்கும்
எனக்கும்
உண்டான உறவின்
உரு தெரியவில்லை !

கேள்விகள் ஏனும் கேட்போம் !

இயல்பே !

நீ
எத்தனை அசைவுகளாய் நகர்கிறாய் ?
நான்
ஓர் நாளையே கணக்கிடலாம் ! 

No comments:

Post a Comment