Sunday, 23 September 2018

அழகானவள் !

தோகையில்
வடிக்கலாம் அவள் வடிவை
தோழியவள்
தோற்கிறாள் என் காதலில் ! 

Thursday, 20 September 2018

உயிர்

இவ்வுலகில்,
மறக்க வேண்டியது உயிர்மட்டும்தான் !
பாதுகாக்க வேண்டியதும் உயிர்மட்டும்தான் !
கண்டறிவோம் ஒரு வழியை
ஆன்மிகம் இல்லாத
ஒரு வழியை !

வெளிவரும் வார்த்தைகள்
உயிர் இனத்துக்கான
வார்த்தையாய் வளம் வரட்டும்.
ரீங்காரம் பாடும் கொசு - அதுவும்
மனிதன் விரல் தொட்டு விளையாடட்டும்.
இவை இயல்பாக நிகழட்டும்.

இயற்கை !
நல்வினை தீவினை அறியாதது,
எடுப்பதை கொடுக்கும்
நீ கொடுப்பதையே எடுக்கும்
இறுதியில் !
உன் நிகழ்வு
புவியில் நிகழ்ந்தவையாக இருக்கும்.
பொழுதுகள் போதாது தோழா !
உன் எண்ணத்தை குறிக்க
நீ எண்ணியவை
எழும் வெளிச்சத்தில்
கரையாது காத்துக்கொள்.
புது ஒரு விடியல் தொடங்கும் . . .


எழுதுமோ !

எழுதும் விரல் இடையே
மாட்டிக்கொண்ட கோல்போல்
யார் நினைவில்
மாட்டிக்கொண்டுள்ளேன் நான்
வாழ்வென்ற வாழ்வும் வைத்து ! 

பயம் !

கண்களுக்கு
பயம் பக்கமே !
பார்த்தேன்,
அவை இரக்கத்தின்
வெளிப்பாடோ என்று . .

இரக்கத்தின் வெளிப்பாடே பயம் எனக்கு !

மறைகிறாய் பெண்ணே !

மறக்கப்படுகிறாய் பெண்ணே
கொஞ்சம் கொஞ்சமாய்,

நீ யாரென்று தெரிந்த போதும்
என் மனதில் மறைகிறாய்,
பித்தம் தீர்ந்ததோ
பித்தன் திருந்தினானோ
தெரியவில்லை மின்னலே !
உன் ஓயாது ஒலித்த குரலும்
மௌனமாய் !
மனதிற்குள் என்கிறது இதயம்.
நானும் சாட்சியாயிற்றே
யாரிடமும் இல்லை நீ !

ஏனோ என்னவளே
என்னுள் மட்டும் ஒட்டிக்கொண்டாய்,
உனக்கு மட்டும் நான் எழுத்தாக
இயல்பெனும் இறப்பு இருக்கும்வரை
நாம் இருப்போம்.
நிலா வலம் வரட்டும்,
நீர் அது உன் பாதம் தேடட்டும்,
இவ்வியற்க்கை நம்மை சுகிக்கட்டும்.
இடம்பெயர்ப்போம் நாம்
' நீ இன்றி இல்லா உலகு '
படைப்போம்
எனக்கென மட்டும் ஒரு மழை
பொழிவாயோ !
என் கார் இருள் மேகமே !

புது ஆயிரங்கள் !

மெல்லிய புன்னகை உனக்கு !
யார் என தெரியாதபோதும்
புன்னகையும் - காகித பூவோ எனக்கு ?

எங்கிருந்து எழுந்தாய்
எங்கே அமர துடிக்கிறாய் ?
அழகான அலைகள் !
அவை புதிரோ
புலம்பலோ
நிற்கும் இடம் தென்படவில்லையோ
நிறுத்திப்பார் !
தனிமையில் கேட்கும் கேள்விகள்
உரையாடுவது யாரோடு ?

குழம்பும் ஆன்மாவே !
உனக்காகவேனும்
ஒரு வரி வடிக்க நினைக்கிறேன்.
சிரிப்பொலியின் அர்த்தம்
சிலரை மட்டும் நினைவூட்டுவது ஏன் ?

ஊர்ந்த உன் நினைவுகளில்
கூர்ந்த உன் பார்வைகள்
உலகம் மறந்து உன்னுள்ளே உருண்டு
உணர்ந்தது உன் தத்துவங்களால் !

புணர்ந்தது புது ஆயிரங்கள்.