Wednesday, 16 October 2019

சிவமாக நாம்!

தனித்து காட்டும் போதை
தவிப்பை தருமோ 
கலைந்து போகும் எண்ணம் 
அதுமட்டும் 
கண்ணோடு கலப்பதேன்?
புன்னகைத்துக்கொள்! 
இதுவரை நீ 
கேட்ட கேள்விகள் 
ஓராயிரம் எட்டிவிட்டது.

நலமே தரும் சிவம் 
நட்புறவை தேடு!

Tuesday, 15 October 2019

என்றும்!

நினைவுகள்
சேகரிப்பதில் 
உணர்வுகள் - தன் 
கொள்கையைத்தான் 
முன்னிறுத்தி வைக்கும்! 

நினைவுகளை 
சேகரிப்பதில் - நாம் 
உணர்வுகளைத்தான் 
முன்னிறுத்தி வைப்போம்!

என்றும்.

Friday, 11 October 2019

நீ யாரென அறிவாயா?

எவரும்
சொல்லாத பதில்கள்
உன்னிடம்
நிறைய உள்ளதோ
கேள்விகள் ஏராளாமாக வெளிவர
திகைக்கிறேன்.

என்னிடம்
கற்க வந்தேன் - என்கிறாய்
என்னை
கற்க வந்ததாக தெரிகிறது,
உண்மையில்
என் தேவைகள் உனக்கு புரிகிறது.
சிறுவன் என்கிறாய்,
சீடன் என்கிறாய்.

அறியாமையின் இருளில்,
விழித்துக்கொண்டதுதான்
உன் கேள்விகள் என்றால்
நீ ஒளி அடைய 
வழி செய்திருப்பேன்.

இல்லை!

உன் அறிவும்
அதன் பொருள் ஊரும் திறனும்
கேள்விகள் மட்டும் கொண்டே
உணர்த்துகிறது - என்னுள்
பதில் கூறும் முயற்சியில்
உருகத்தொடங்கும்
என் மன திட உணர்வுகள்.

கண்முன் தெரியும்
இயல்பின் வெற்றிடத்தில்
நீ மட்டும் தெரிகிறாய்

சிறந்த சிந்தனைகள்!

வணா! (பெயர்)
இங்கே வா
உன்னிடம் ஒரு கேள்வி,
உனக்கு தெரிந்தவரை பதில் சொல்
- நீ யாரென அறிவாயா?

-------------------------------------------------------

நானும் விதூடகன்!

Tuesday, 13 August 2019

ஒரு முட்டாளின் முகம் !

எவ்வளவுக்கூர்மை என்னறிவு!

என்க,
பார்க்க முடிகிறது
ஒரு முட்டாளின்
முழுமையான முகத்தை.

அறியாமை அசைந்தாலும்
அந்த மௌன முகத்தில்
சலனம் சற்றும் இல்லை - நிறுத்திப்பார்க்க
வேண்டும் நமக்கு நிதானம்!

ஒரு கலியுக நாகரீகவாதி
நிர்வாண நாகரிகத்தை
கண்முன்னே காணும் சூழலது!

புதிய அம்முகம்
புன்னகைக்க திடுக்கிட்டேன்,
அடுத்த துளி அறிவை
நான் காலத்தோடு கடக்கும்போது.


Saturday, 27 July 2019

பிறந்தேன் - எழுந்தேன் !

நீ 
ஆண் - பெண் என
பிரிந்திருப்பது ஏன் உயிரே !
உன்னிடம் விடை கிடைக்கும் 
இடங்கண்டு சொல்வாயோ?

எனக்கும், 
பிறக்கும் ஆசை கொடுத்திருப்பாய்.
பரம் சென்ற 
அரு ஒன்றை பிரியச்செய்திருப்பாய்.

நான் பிறக்க - வரங்கேட்டு 
எத்தனை தவம் பூண்டேனோ ?
முதுமை எல்லை மீறி 
முகம் சுழிக்கும் என்னை 
எடுக்க உண்மையில் 
எத்தனை சிவம் ஆனேனோ ?

எதுவும் புரியா பிரம்மை 
புரிந்துகொள் என்கிறது.

பிறந்தேன் - எழுந்தேன்.

எளிதில் தொடும் உடல் 
எளிதில் தொழும் உள்ளம் 
எதற்கோ பிறந்தேன் நான் !
உன்னிடம் கேட்க முன்வந்து 
நீயே கேள்வியானதுதான் விடையோ
உயிரே? 

Thursday, 27 June 2019

ஒரு கதைக்களம் !


ஒரு கதைக்களம்
மலைச்சாரலே சூழல்,
குன்றுகள் நிறைந்த
கூடுகள் - அதில் 
துளி துளியாக சேர்ந்தது
எண்ணங்கள் !

கரடு முரடென பாதை உருவாக்கி
நீர்பாய்ச்சி,
மிருகம் என்று விமர்சிக்கும் உயிர்க்கும்
தாகம் தீர்த்து,
உருண்டு விழுகிறது
வெளிப்படுகிறது.
நீ கண்டு மகிழும்
நீர்வீழ்ச்சியாக !

#என்எண்ணங்கள்

Saturday, 9 February 2019

ஏமாற்றமல்ல !

அடுத்த நொடியை
பிடிக்க தொடுத்த
ஓர் கற்பனையின் இழப்பு,
யாரோ
கொடுத்த நினைவை
உயிருக்குள் வலியோடு
படித்த காலம்.

இவ்விரண்டும்
என் வாழ்வின் மாற்றமே !

ஏமாற்றமல்ல !