Tuesday, 13 August 2019

ஒரு முட்டாளின் முகம் !

எவ்வளவுக்கூர்மை என்னறிவு!

என்க,
பார்க்க முடிகிறது
ஒரு முட்டாளின்
முழுமையான முகத்தை.

அறியாமை அசைந்தாலும்
அந்த மௌன முகத்தில்
சலனம் சற்றும் இல்லை - நிறுத்திப்பார்க்க
வேண்டும் நமக்கு நிதானம்!

ஒரு கலியுக நாகரீகவாதி
நிர்வாண நாகரிகத்தை
கண்முன்னே காணும் சூழலது!

புதிய அம்முகம்
புன்னகைக்க திடுக்கிட்டேன்,
அடுத்த துளி அறிவை
நான் காலத்தோடு கடக்கும்போது.


Saturday, 27 July 2019

பிறந்தேன் - எழுந்தேன் !

நீ 
ஆண் - பெண் என
பிரிந்திருப்பது ஏன் உயிரே !
உன்னிடம் விடை கிடைக்கும் 
இடங்கண்டு சொல்வாயோ?

எனக்கும், 
பிறக்கும் ஆசை கொடுத்திருப்பாய்.
பரம் சென்ற 
அரு ஒன்றை பிரியச்செய்திருப்பாய்.

நான் பிறக்க - வரங்கேட்டு 
எத்தனை தவம் பூண்டேனோ ?
முதுமை எல்லை மீறி 
முகம் சுழிக்கும் என்னை 
எடுக்க உண்மையில் 
எத்தனை சிவம் ஆனேனோ ?

எதுவும் புரியா பிரம்மை 
புரிந்துகொள் என்கிறது.

பிறந்தேன் - எழுந்தேன்.

எளிதில் தொடும் உடல் 
எளிதில் தொழும் உள்ளம் 
எதற்கோ பிறந்தேன் நான் !
உன்னிடம் கேட்க முன்வந்து 
நீயே கேள்வியானதுதான் விடையோ
உயிரே? 

Thursday, 27 June 2019

ஒரு கதைக்களம் !


ஒரு கதைக்களம்
மலைச்சாரலே சூழல்,
குன்றுகள் நிறைந்த
கூடுகள் - அதில் 
துளி துளியாக சேர்ந்தது
எண்ணங்கள் !

கரடு முரடென பாதை உருவாக்கி
நீர்பாய்ச்சி,
மிருகம் என்று விமர்சிக்கும் உயிர்க்கும்
தாகம் தீர்த்து,
உருண்டு விழுகிறது
வெளிப்படுகிறது.
நீ கண்டு மகிழும்
நீர்வீழ்ச்சியாக !

#என்எண்ணங்கள்

Saturday, 9 February 2019

ஏமாற்றமல்ல !

அடுத்த நொடியை
பிடிக்க தொடுத்த
ஓர் கற்பனையின் இழப்பு,
யாரோ
கொடுத்த நினைவை
உயிருக்குள் வலியோடு
படித்த காலம்.

இவ்விரண்டும்
என் வாழ்வின் மாற்றமே !

ஏமாற்றமல்ல !

Sunday, 11 November 2018

உணர்வுச்சிலை !

உந்த தகுதியிருந்தும்
ஊரும் காலத்தில்
உலா வர நினைத்தது தானோ
என்னை
காலம் மாறுமென்று
எண்ண வைத்தது.

வாழ் இனிய கனியே
உன்னை
காண காய்ந்திருந்தேன்
நான்
வெயில்பட்ட உடல்
நிழல்பட்டுத்திரும்ப
உணர்ந்தேன் !

உணர்ந்தேன்
உந்த தகுதியிருந்தும் !

Sunday, 23 September 2018

அழகானவள் !

தோகையில்
வடிக்கலாம் அவள் வடிவை
தோழியவள்
தோற்கிறாள் என் காதலில் ! 

Thursday, 20 September 2018

உயிர்

இவ்வுலகில்,
மறக்க வேண்டியது உயிர்மட்டும்தான் !
பாதுகாக்க வேண்டியதும் உயிர்மட்டும்தான் !
கண்டறிவோம் ஒரு வழியை
ஆன்மிகம் இல்லாத
ஒரு வழியை !

வெளிவரும் வார்த்தைகள்
உயிர் இனத்துக்கான
வார்த்தையாய் வளம் வரட்டும்.
ரீங்காரம் பாடும் கொசு - அதுவும்
மனிதன் விரல் தொட்டு விளையாடட்டும்.
இவை இயல்பாக நிகழட்டும்.

இயற்கை !
நல்வினை தீவினை அறியாதது,
எடுப்பதை கொடுக்கும்
நீ கொடுப்பதையே எடுக்கும்
இறுதியில் !
உன் நிகழ்வு
புவியில் நிகழ்ந்தவையாக இருக்கும்.
பொழுதுகள் போதாது தோழா !
உன் எண்ணத்தை குறிக்க
நீ எண்ணியவை
எழும் வெளிச்சத்தில்
கரையாது காத்துக்கொள்.
புது ஒரு விடியல் தொடங்கும் . . .