Sunday, 11 November 2018

உணர்வுச்சிலை !

உந்த தகுதியிருந்தும்
ஊரும் காலத்தில்
உலா வர நினைத்தது தானோ
என்னை
காலம் மாறுமென்று
எண்ண வைத்தது.

வாழ் இனிய கனியே
உன்னை
காண காய்ந்திருந்தேன்
நான்
வெயில்பட்ட உடல்
நிழல்பட்டுத்திரும்ப
உணர்ந்தேன் !

உணர்ந்தேன்
உந்த தகுதியிருந்தும் !

Sunday, 23 September 2018

அழகானவள் !

தோகையில்
வடிக்கலாம் அவள் வடிவை
தோழியவள்
தோற்கிறாள் என் காதலில் ! 

Thursday, 20 September 2018

உயிர்

இவ்வுலகில்,
மறக்க வேண்டியது உயிர்மட்டும்தான் !
பாதுகாக்க வேண்டியதும் உயிர்மட்டும்தான் !
கண்டறிவோம் ஒரு வழியை
ஆன்மிகம் இல்லாத
ஒரு வழியை !

வெளிவரும் வார்த்தைகள்
உயிர் இனத்துக்கான
வார்த்தையாய் வளம் வரட்டும்.
ரீங்காரம் பாடும் கொசு - அதுவும்
மனிதன் விரல் தொட்டு விளையாடட்டும்.
இவை இயல்பாக நிகழட்டும்.

இயற்கை !
நல்வினை தீவினை அறியாதது,
எடுப்பதை கொடுக்கும்
நீ கொடுப்பதையே எடுக்கும்
இறுதியில் !
உன் நிகழ்வு
புவியில் நிகழ்ந்தவையாக இருக்கும்.
பொழுதுகள் போதாது தோழா !
உன் எண்ணத்தை குறிக்க
நீ எண்ணியவை
எழும் வெளிச்சத்தில்
கரையாது காத்துக்கொள்.
புது ஒரு விடியல் தொடங்கும் . . .


எழுதுமோ !

எழுதும் விரல் இடையே
மாட்டிக்கொண்ட கோல்போல்
யார் நினைவில்
மாட்டிக்கொண்டுள்ளேன் நான்
வாழ்வென்ற வாழ்வும் வைத்து ! 

பயம் !

கண்களுக்கு
பயம் பக்கமே !
பார்த்தேன்,
அவை இரக்கத்தின்
வெளிப்பாடோ என்று . .

இரக்கத்தின் வெளிப்பாடே பயம் எனக்கு !

மறைகிறாய் பெண்ணே !

மறக்கப்படுகிறாய் பெண்ணே
கொஞ்சம் கொஞ்சமாய்,

நீ யாரென்று தெரிந்த போதும்
என் மனதில் மறைகிறாய்,
பித்தம் தீர்ந்ததோ
பித்தன் திருந்தினானோ
தெரியவில்லை மின்னலே !
உன் ஓயாது ஒலித்த குரலும்
மௌனமாய் !
மனதிற்குள் என்கிறது இதயம்.
நானும் சாட்சியாயிற்றே
யாரிடமும் இல்லை நீ !

ஏனோ என்னவளே
என்னுள் மட்டும் ஒட்டிக்கொண்டாய்,
உனக்கு மட்டும் நான் எழுத்தாக
இயல்பெனும் இறப்பு இருக்கும்வரை
நாம் இருப்போம்.
நிலா வலம் வரட்டும்,
நீர் அது உன் பாதம் தேடட்டும்,
இவ்வியற்க்கை நம்மை சுகிக்கட்டும்.
இடம்பெயர்ப்போம் நாம்
' நீ இன்றி இல்லா உலகு '
படைப்போம்
எனக்கென மட்டும் ஒரு மழை
பொழிவாயோ !
என் கார் இருள் மேகமே !

புது ஆயிரங்கள் !

மெல்லிய புன்னகை உனக்கு !
யார் என தெரியாதபோதும்
புன்னகையும் - காகித பூவோ எனக்கு ?

எங்கிருந்து எழுந்தாய்
எங்கே அமர துடிக்கிறாய் ?
அழகான அலைகள் !
அவை புதிரோ
புலம்பலோ
நிற்கும் இடம் தென்படவில்லையோ
நிறுத்திப்பார் !
தனிமையில் கேட்கும் கேள்விகள்
உரையாடுவது யாரோடு ?

குழம்பும் ஆன்மாவே !
உனக்காகவேனும்
ஒரு வரி வடிக்க நினைக்கிறேன்.
சிரிப்பொலியின் அர்த்தம்
சிலரை மட்டும் நினைவூட்டுவது ஏன் ?

ஊர்ந்த உன் நினைவுகளில்
கூர்ந்த உன் பார்வைகள்
உலகம் மறந்து உன்னுள்ளே உருண்டு
உணர்ந்தது உன் தத்துவங்களால் !

புணர்ந்தது புது ஆயிரங்கள்.

Friday, 31 August 2018

தமிழ் !


ஒப்பிடவில்லை
ஒப்பில்லா மொழியை !

இறைப்பொருள்
அதன் உணர்வு.

அதிகமே !
என் மொழியின் விளக்கம்.

ஒலி உரு-ஆன உயிர்க்கு
உடல் விழி ஓதும் பிராத்தனை,
உளியால் உருவான கவிதை !


திருத்தும்
திருந்தும்
துதி தினந்தோறும் பிறக்காதோ !
இறவாத்தமிழ் - எனும்
இயல்பு ஒன்று
இந்த நொடியே தொடராதோ !

Saturday, 11 August 2018

உவமை !

முதல் வார்த்தையே
பித்தன் என்றால்
பிழையாகுமோ ?
பின்வரும் அர்த்தம்
பிரியாது என்றால்
புரிந்துகொள்.

பிதற்றுவது பித்தனல்ல !

பிஞ்சும்,
புரியும்,
புத்தி உருவாக்கியது
உடையவன்தான்.

உன்னுள் இருக்கும்
உள்ளம் தெரிவதைவிட,
உன் உவமையதைக்காட்டு !

உன்னோடு
என்னவனும் (எழுத்து அவன்)
வாழ்வான் !

Saturday, 14 April 2018

ஒரு நாள் !

ஓர் மரத்தடியில்
மௌனமாய் !
இயற்கையின் குரல்
கேட்கும் அளவிற்க்கு
அமர்ந்திருக்கிறேன் !

தன்னிலை !
என்ன என்பதை
சொல்ல தெரியாதபோதும்,
சொல்ல தோணுகிறது.
நான் !
எங்கோ ஓடி
ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறேன்.
 
எல்லாம் மறந்து போக
இன்பம் கிடையாதே
என்னுல் !
எழுதும் விதியும்
எழுத்து பிழையில்தான்.

Thursday, 12 April 2018

உன்புலம் !

தெரியாதவை,
என்னை திணறவைப்பவை !

தெரியாததில்,
நாளை என்கிறேன் !

தெரிந்தவையே,
நான் என்கிறேன் !

ஆச்சர்யம் - தெரியாமல் பார்ப்பதில்தானே !

தோன்றும் எண்ணங்களே
எங்கிருந்து தோன்றுகின்றீர் ?
உன்புலம் தெரியாமல் தேடுகிறேன் !
உண்மையில் உன்னுள் ஓடுகிறேன் !

தெரிந்தவையே !
உனக்கொன்று சொல்கிறேன்
தெரியாதவை !
என்னை தெளிவுப்படுத்தும் .

Wednesday, 11 April 2018

நாளும்

ஒரு
தோல்வியைக்கண்டு
திரும்பும் கனவு
கதையாக வேண்டும்
உடன்
தோழமைக்கொண்டு
துணையாக வந்தால்
தொலைத்திட வேண்டும்

நான் எனும் நல்லொழுக்கத்தை !

- நாளும் தொலைப்போம்
ஒரு
நல்லொழுக்கத்தை !

சார்ந்த எண்ணங்கள் !

எண்ணங்கள்,
யோசிப்பது அனைத்துமே எண்ணங்களா ?

இவ்வுலகில் பிறந்தேன்
- இன்று வரை வளர்கிறேன்.

சிலையாய் சிந்தித்தாலும்
சிலை சிந்திக்குமா என்பதில் தோற்கிறேன்.
சரி,
முன்னோடிகள் இருக்கிறார்களா
என் பாதையில் ?
பாதி கடந்தவர்கள் எல்லாம்
பைத்தியம் ஆனார்கள் என எச்சரிக்கை.

ம்,
தாங்கிக்கொண்டேன்
- இன்று வரை வளர்கிறேன்.

உண்மையில் உலகிற்கு புரிகிறதா ?

ஒருவர்
உன் கண்களில் தெரிவதைவிட,
அவர் கண்களுக்கு பின்னால்
ஆயிரம் பார்க்கிறார்கள் என்று.

எனக்கு எதுவும் தெரியவில்லை !

பிறவியிலேயே பார்வை போய்
தனிமை வந்து
மனிதனிடம் மாட்டிக்கொண்ட
நாய்போல்,
நான் ஊமையாக பிறந்துவிட்டேன்.
- என ஊளையிடுகிறேன்

தவிர்க்க முடியாதவைதான்
தகர்க்க முடியாதவை அல்ல !

நம் நினைவு தெரியும் முன்பே
நம்மை நினைவில் கொண்டதல்லவா
இந்த சமூகம் !
சராசரி ஒருவனாக
வளம் வருவேனா
எனக்குள்ளாகவே ஏக்கங்கள்.
நான் என்னை மறந்தாலும்
ஞாபகம்,
சிலரை மட்டும் நினைவூட்டுவது
அன்பில்தான் !

ஒரு கடிதமாய் உருவெடுக்கிறேன் !
சிலருக்கு செய்தி
சிலருக்கு உணர்வாக உலவுகிறேன்.
நீ கரைந்த எண்ணங்களில்
நான்
நானாக வாழ வழிகிடைக்குமா ?

Sunday, 8 April 2018

நீங்காதவையே !

மறக்க முடியாத
நினைவுகள் நீங்காதவையே !
திரும்ப திரும்ப
எடுத்து என்னை காயப்படுத்தாதே,
என்னில் இருக்கும் சிறு
ஆனந்தத்தையும்
நான் இழக்க நேரிடும் .

இறந்த எண்ணங்கள்

தோன்றும் எண்ணங்களோ,
அதன் மறுசொல்லோ,
அல்லது வெளிப்பாடோ
தோற்பது மட்டும்
நானாக இருக்கிறேன் .

ஆயிரம் முறையும் சொல்லிவிட்டேன்

இவை கடந்து போபவையே
கலக்கம் வேண்டாம்
தொடரும் எண்ணங்கள் தோற்பதில்லை
தோண்டும்வரை !
துளை வேண்டாம் உன் வாழ்வில்
துணிவெனும் துகள் போதுமே !

எவரும் கேட்பதாயில்லை

பிளவுபட்ட என் இதயம்
எப்படி சுகிக்குமோ - தெரியவில்லை
என் இறந்த எண்ணங்களை . . . .

தடை

பெரிதாய் ஏதேனும்
தடுப்பதாக தோன்றினால்
அன்னையென்றே பொருள் .
இல்லையென்றால்,
பெரிதில்லையென்பதையுணர் !

என் காலம் !

ஆரம்பமே
ஆடம்பரமானது,
யாவரும்
வெகுதூரமாய் ஓடுவதை காண்கிறேன் .
இயற்க்கை
யார் கண்ணிலும் காணவில்லை,
இயல்பை துரத்தும் நாடகம்
எத்தனை வடிவானவை .
நீயேனும் செவிகொடு இயல்பே
உண்மை மறக்கிறது
உறவுகள் கொண்டாடவில்லை
உனக்கும்
எனக்கும்
உண்டான உறவின்
உரு தெரியவில்லை !

கேள்விகள் ஏனும் கேட்போம் !

இயல்பே !

நீ
எத்தனை அசைவுகளாய் நகர்கிறாய் ?
நான்
ஓர் நாளையே கணக்கிடலாம் !